
சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் குறித்து வருகிற ஒவ்வொரு செய்தியும் மகிழ்வையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
சூரியன் பிரமிப்பானது, பிரகாசமானது என்பது எப்படி உண்மையோ, அதைப் போன்றது ஒரு மிகச் சிறந்த, தரத்தில் மிக உயர்ந்த பொழுதுபோக்குப் படம் ஒன்றை அனைத்து தரப்பினருக்கும் தரவிருக்கிறார்கள் ரஜினியும் ஷங்கரும் என்பது.
எந்திரன் எப்போது ரிலீஸ் என்ற விஷயத்தில் இப்போது ஒரு தெளிவும் பிறந்துள்ளது. இந்த ஆண்டா அடுத்த ஆண்டா என்ற குழப்பத்துக்கு முடிவு கட்டும் விதமாய், இந்த ஆண்டே படத்தைக் கொண்டு வருவதில் ஷங்கர் மிக உறுதியாக உள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தையும் ரசிகர்களையும் சந்தோஷப்பட வைத்துள்ளது.
அதே நேரம் படத்தின் தரம் மற்றும் காட்சியமைப்புகளின் சில சாம்பிள்களைப் பார்த்து சன் நிறுவனம் பிரமித்துப் போய்விட்டதாம்.
ஹாலிவுட் படங்களைப் போலல்லாமல், ஒரு ஹாலிவுட் படமாகவே தங்களின் முதல் ஒரிஜினல் தயாரிப்பு எந்திரன் வந்திருப்பதில் ஏக திருப்தி அவர்களுக்கு.
‘தரத்தில், கிராபிக்ஸில், பிரமாண்டத்துக்கான செலவில் என எதிலும் காம்ப்ரமைஸ் வேண்டாம்… ஷங்கர் விருப்பத்துக்கு எல்லாவற்றையும் விட்டுவிடுவோம்’ என அமைதியாக ஒதுங்கி நிற்கிறது சன் என்பதுதான் இன்றைய நிலை.
இந்தப் படத்தில் நூறு ரஜினிகள் தோன்றும் காட்சிகள் பிரமிப்பின் உச்சமாக இருக்கும் என்கிறார்கள். இந்தக் காட்சி 3 டியில் வருகிறது. ச்சும்மா கொஞ்சம் மனசுக்குள்ளே நினைச்சுப் பாருங்க அந்தக் காட்சிகளை…
கிராபிக்ஸ் காட்சிகளுக்கு ரொம்பவே மெனக்கெட்டு வருகிறது எந்திரன் டீம். அவதார் புகழ் ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோதான் இதற்கு முழு பொறுப்பு. கிட்டத்தட்ட படத்தின் சரி பாதி 3 டியில் தயாராகிறது. கிராபிக்ஸில் இன்னொரு அவதார் எனும் அளவுக்கு பிரமாண்டம் காட்டியிருக்கிறார்களாம், இதுவரை. இன்னும் ஒரு பகுதி கிராபிக்ஸ் பணி மிச்சமுள்ளது.
உடையில்லாத ரோபோ…
இன்னொரு காட்சியில், ‘ரோபோ ரஜினி’ கிட்டத்தட்ட நிர்வாண கோலத்தில் தோன்ற வேண்டும். அதாவது உடையில்லாத ரோபோ…
இதை ரஜினியிடம் சொல்ல முதலில் சற்றுத் தயங்கிய ஷங்கர், பின்னர் விஷயத்தைத் தெரிவிக்க, ‘கூல்’ என சொல்லிவிட்டு சம்மதித்தாராம் ரஜினி. அந்தக் காட்சி டெர்மினேட்டர் பட காட்சிக்கு நிகரான முக்கியத்துவம் கொண்டது என்பதாலேயே ஒப்புக் கொண்டாராம் ரஜினி.
இந்தக் காட்சி படமாக்கல் குறித்து வெளியில் செய்தி பரவாமலிருக்க வேண்டும் என்பதற்காக, தரமணியில் உள்ள சன் ஸ்டுடியோவிலேயே படமாக்கியுள்ளனர். கேமராமேன் ரத்னவேலு, ஷங்கர் உள்ளிட்ட மூவர் தவிர, செட்டிலிருந்த மற்ற அனைவரும் வெளியேற்றப்பட்டனர் அந்த நேரத்தில்.
அரசியல் நெத்தியடி…
படத்தில் அரசியல் சரவெடிகளுக்குப் பஞ்சமே இல்லை என்கிறார்கள். இதற்கு முன்னும் பல படங்களில் ரஜினி அரசியல் விமர்சனங்களை முன் வைத்துள்ளார். ஆனால் அவற்றுக்கெல்லாம் சிகரம் வைப்பது போல இந்தப் படத்தில் பல அரசியல் வசனங்கள், விமர்சனங்கள் உள்ளனவாம். குறிப்பாக நா முத்துக்குமார் எழுதியுள்ள ஒரு சாட்டையடி அரசியல் கவிதை பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம்.
அந்த கவிதையில் வரும் சில நெத்தியடி வரிகள் இவை…
‘வாழ்க்கைக் கொடுப்பவன் வாக்காளன்… வாக்கரிசி போடுபவன் வேட்பாளன்.’
‘அரசியலில் என்றுமே நான் நிராயுதபாணி’
போன்ற வரிகள் உள்ள இந்த கவிதையில், சூப்பர் பஞ்ச் இது:
‘அர்த்த சாஸ்திரம் உங்க வழி… தர்ம சாஸ்திரம் என் வழி!’
எந்திரன் படத்தின் பாடல்கள்
வா! வா! தலைவா!
வணக்கம்! வணக்கம்! – நீ
வந்தால் எங்கள்
வாழ்வு மணக்கும்!
வெள்ளை நிறத்து வேட்டியிலே
கறுப்பு சிவப்புக் கரையிருக்க…
நீல நிறத்துக் கண்ணாடி
கண்களின் மேலே
கொலுவிருக்க…
மஞ்சள் நிறத்து
மேல்துண் டணிந்த
பச்சைச் தமிழே! வருக! எங்கள்
இச்சைத் தமிழே! வருக!
0 responses to "அர்த்தசாஸ்திரம் உங்க வழி… தர்மசாஸ்திரம் என் வழி!"