4:32 AM | Posted in


மழை நின்று பின்பும் தூறல் போல
உன்னை மறந்த பின்பும் காதல்

அலை கடந்த பின்பும் ஈரம் போல
உன்னை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கும் பெயர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா

மழை நின்று பின்பும் தூறல் போல
உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உன்னை பிரிந்த பின்பும் காதல்

நீர்த்துளிகள் நிலம் விழுந்தால்
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என்மனதில் நீ நுழைந்தால்
மெளனம் கூட இசை அமைக்கும்

பூங்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும்
தாகம் இன்னும் அடங்கவில்லை

ஆடம் நிறைந்து நடக்கும்
இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வாணம் இருக்கும் வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழைத்துளி பனித்துளி தொலைந்த பின்னே
அது மறுபடி இரண்டு என பிரிந்திடுமா

மழை நின்று பின்பும் தூறல் போல
உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உன்னை பிரிந்த பின்பும் காதல்

கண் இமைகள் கைத்தட்டியே
உன்னை மெல்லை அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகில் நானிருந்தும்
உண்மை சொல்ல துணிவில்லை
கைகளிலே விரல் இருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வது தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவினில் வந்துவிடு
நம் திருமண அழைப்பிதழ் தந்துவிடு

மழை நின்று பின்பும் தூறல் போல
உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உன்னை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கும் திறமை கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா ….
Category:
��

Comments

0 responses to "ராமன் தேடிய சீதை"